தமிழகம்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக கண்டெடுப்பு!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், அவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில் அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.