தமிழகம்
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உயிரிழப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பினால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில், அவருக்கு இன்று அதிகாலை 4.00 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி காலை 7.50 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.