தமிழகம்
மனைவியுடன் அசந்து தூங்கிய மகன்.. அரிவாள் எடுத்து வெட்டிய தந்தை.. தடுக்க முயன்ற தாயும் பலி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெணி ஒன்றில், வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, இவருக்கும், அனுசியா என்ற இளம்பெண் ஒருவருக்கும், காதல் ஏற்பட்டுள்ளது.
அனுசியா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி, இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சமாதானம் ஆவது போல் நடித்து, தன்னுடைய மகனையும், மருமகளையும், சுபாஷின் தந்தை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர்களை, பாசமுள்ள தந்தை போல் பார்த்துக் கொண்ட அவர், அன்று இரவு தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியுள்ளார். அதாவது, அன்று இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அரிவாளை எடுத்து, தன்னுடைய மகனை வெட்ட முயற்சி செய்துள்ளார். இதனை தடுக்க முயன்ற தன்னுடையை மனைவியையும் வெட்டியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் சுபாஷ்-ம், அவருடைய தாயும் பலியான நிலையில், அனுசியா படுகாயங்களுடன் தப்பித்துள்ளார். சாதி மாறி திருமணம் செய்துக் கொண்ட மகனை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login