தமிழகம்
பள்ளி விடுதியில் தீ விபத்து: 13 பேர் பலி!
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் உள்ள பள்ளி விடுதியில் நேற்று இரவு திடீரென்று தீப்பற்றியது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைத்தனர். தீயில் சிக்கியவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.