Connect with us

Raj News Tamil

சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழகம்

சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

மயிலாடுதுறையில் சிறுத்தை பதுங்கி இருந்ததாக கூறப்பட்ட கூறைநாடு பகுதியில் இரண்டாவது நாளாக 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அதில் மூன்று பள்ளிகளில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை நகரில் கடந்த 2ம்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் கூரைநாடு பள்ளியில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டறியப்படாததால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மூன்று பள்ளிகளுக்கு வனத்துறை தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுத்தை கூறைநாடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கடந்து ஆரோக்கியநாதபுரம் எரகளி தெரு காட்டுப்பகுதியில் பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top