Connect with us

Raj News Tamil

சேலம் மத்திய சிறையில் 12 கைதிகளுக்கு வயிற்று வலி!

தமிழகம்

சேலம் மத்திய சிறையில் 12 கைதிகளுக்கு வயிற்று வலி!

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என மொத்தம் 1,076 பேர் அடைக்கப்பட்டுள்ளனர் கைதிகளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையில் ஐந்து இட்லி வழங்கப்படும். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை கைதிகள் அனைவருக்கும் இட்லி வழங்கப்பட்டது.

சிறையில் ஐந்தாவது பிளாக்கில் 300 கைதிகளும் 6வது பிளாக்கில் 150 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அரக்கோணம் சேலத்தை சேர்ந்த கஞ்சா மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் 12 பேர் வயிற்று வலி என்று கூறி சிறை காவலர்களால் அவர்களை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் இட்லி வழங்கப்பட்டது ஆனால் விசாரணை கைதிகளான இந்த 12 பேருக்கு மட்டும் ஒரே நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் சிறைத்துறை சூப்பிரண்ட் கேட்ட பொழுது உடல் வெப்பம் அதிகம் காரணமாகத்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கைதிகள் சாப்பிட்ட இட்லியால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

இருந்த போதிலும் 12 பேரும் ஏதோ உள்நோக்கத்துடன் வயிற்று வலி என்று கூறி உள்ளனர். அவர்கள் ஒரே நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டதா ஏன் கூறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறை சூப்பிரண்ட் வினோத் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top