Connect with us

Raj News Tamil

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சிக்கிய கப்பல்! அதை மீட்கும் முயற்சியில் வல்லுநர் குழுவினர்!

தமிழகம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சிக்கிய கப்பல்! அதை மீட்கும் முயற்சியில் வல்லுநர் குழுவினர்!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலனை மிதவைக் கப்பல் ஒன்று ஏற்றி வந்தது .இக்கப்பல் கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது. இதனை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றது என்றாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் இதற்கான வல்லுனர் குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையம்வந்துள்ளனர். அவர்கள் இதனை மீட்கும் பணியை இன்று காலை முதலே தொடங்கினர் . பாறையில் சிக்கியுள்ள மிதவைக் கப்பலை இழுப்பதற்கு வல்லுநர் குழுவினர் 3 பரிந்துரைகளை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது .இந்த வல்லுனர் குழுவினர் கடல் பகுதிகளில் இதுபோன்ற கப்பல்கள் சிக்கும் பொழுது அதனை மீட்கும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top