Connect with us

Raj News Tamil

மாணவி தற்கொலை: பெற்றோர் திட்டியது தான் காரணமா?

தமிழகம்

மாணவி தற்கொலை: பெற்றோர் திட்டியது தான் காரணமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கல்பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப் கூலி தொழிலாளியாக கேரளாவில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளன மூத்த மகள் அன்பேத்பாரதி 16 பாதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளியில் படித்த ஆண் நண்பருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்த அவரை அவரது தாய் ராஜேஸ்வரி திட்டியதாக கூறப்படுகிறது ஏற்கனவே செய்முறை கடுமையாக இருந்ததாக மன அழுத்தத்தில் இருந்து அவர் தாய் திட்டியதாலும் மனமுடைந்த மாணவி அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள ரயில்வே தண்டவளத்திற்கு சென்று சென்னை எழும்பூர் நோக்கிச் சென்ற ரயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பற்றி தகவல் அறிந்து தாய் மற்றும் அவரது தங்கைகள் அன்பேத் பாரதியின் உடலைக் கண்டு கதறி அழுதனர் இதைப்பற்றி தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

மாணவி அம்பேத்பாரதி பாதூர் உயர்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பில் பள்ளி முதல் மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top