Connect with us

Raj News Tamil

பட்டபகலில் தொழிலதிபரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!

தமிழகம்

பட்டபகலில் தொழிலதிபரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!

சென்னை தி.நகர், மேட்லி சாலையை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் தொழில் சம்பந்தமாக, நண்பர் ராம்குமார்(50), என்பருடன், வேளச்சேரி, சேவாநகர் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த, 6 பேர் கொண்ட மர்மகும்பல், ராம்குமாரை துரத்திவிட்டு பழனிச்சாமியை சரமாரியாக வெட்டி வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள் தரமணி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை கொலை செய்தவர்கள் யார்? என கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top