Connect with us

Raj News Tamil

அரசு பள்ளி அருகில் கஞ்சா விற்ற இளைஞர் கைது!

தமிழகம்

அரசு பள்ளி அருகில் கஞ்சா விற்ற இளைஞர் கைது!

புதுச்சேரி மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி திருபுவனை பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து மேற்கு பிரிவு எஸ்பி வம்சித ரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் மதகடிப்பட்டுபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே மறைவாக நின்று கண்காணித்தினர்.

அப்பொழுது போலீசாரை பார்த்தவுடன் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றார் அவரை சுற்றி வளைத்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணை அவர் கண்டமங்கலம் பள்ளி நேளியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை மகன் ஜெயகாந்தன் என்பதும் இவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து அவரிடம் இருந்த 120-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top