தமிழகம்
தாம்பரம் அருகே சாலையில் உயர் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு!
சென்னை கிழக்கு தாம்பரம், மகாலட்சுமி நகர், சிட்லப்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு திடிரென உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் உடனடியாக கம்பி அறுந்து விழுந்த இடத்தை சுற்றி காய்கறி பெட்டிகளை வைத்து தடுப்புகளை அமைத்து வாகனங்களை திசை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது தொடர்ந்து அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்பு மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டதை அடுத்து மின்சாரத்தை துண்டிட்ட ஊழியர்கள் மின்சார கம்பியை சீர் செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.