Connect with us

தொழிலதிபர்கள் மூலம் நாட்டை ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி!

இந்தியா

தொழிலதிபர்கள் மூலம் நாட்டை ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி!

தொழிலதிபர்கள் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் பிண்ட் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்திய அரசமைப்பு சாசனம் என்பது வெறும் புத்தகம் கிடையாது. விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி, பட்டியலின மக்களுக்கு உரிமைகளை அளிக்கும் சாசனம் ஆகும். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனம் இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்குகிறது.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து அரசமைப்பு சாசனத்தை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மற்றும்பாஜக தலைவர்கள் விரும்புகின்றனர்.

காங்கிரஸும் இண்டியா கூட்டணி கட்சிகளும் அரசமைப்பு சாசனத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறோம். இரு அணிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

சுமார் 25 தொழிலதிபர்கள் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் ஆட்சி செய்ய பாஜகவிரும்புகிறது. தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால்விவசாயிகள், தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது.

ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தை அமல்படுத்தியதால் ஏராளமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக தீவிர முயற்சி செய்கிறது.

பணமதிப்பிழப்பு, தவறான முறையில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. பணவீக்கமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top