Connect with us

Raj News Tamil

பழங்குடியின மக்களின் குழந்தைகள்; கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி!

இந்தியா

பழங்குடியின மக்களின் குழந்தைகள்; கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி!

பழங்குடியின மக்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ராகுல் காந்தி அஸ்ஸாமில் நடைப்பயணம் மேற்கொண்ட போது பழங்குடியின மக்களிடம் பேசியதாவது, “நாங்கள் உங்களை ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். பாஜக உங்களை வனவாசிகள் என்றழைக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

பாஜக உங்களை காடுகளிலேயே வைத்திருக்க விரும்புகிறது. உங்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை. உங்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதையோ, தொழில் செய்வதையோ பாஜக விரும்பவில்லை.

உங்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் வழங்குவதற்கு நாங்கள் விரும்புகிறோம். உங்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உங்களிடம் வழங்கப்பட்டாக வேண்டும். அதற்காக நாங்கள் சட்டம் இயற்றுவோம்.

பல மாதங்களாக மணிப்பூரில் உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல் நிலவி வருகிறது, இருப்பினும் பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் மணிப்பூரில் இருந்தே இந்த நடைப்பயணத்தை துவக்கினோம்.

More in இந்தியா

To Top