Connect with us

Raj News Tamil

கண்டுகொள்ளாத பிள்ளைகள்…சொத்துக்களை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி

உலகம்

கண்டுகொள்ளாத பிள்ளைகள்…சொத்துக்களை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் இவரை கண்டுகொள்ள வில்லை.

இதனால் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த மூதாட்டி தனது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டிய ரூ.23 கோடி மதிப்பிலான சொத்துக்களை தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால் கால்நடை மருத்துவ மனையை துவக்கி, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top