தமிழகம்
இன்று வெளியாகிறது 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்!
12-ம் வகுப்பு பொதுச் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
இந்த தேர்வினை 3,302 மையங்களில் சுமார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், 8 ஆயிரத்து 190 தனித்தேர்வர்களும் என 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
இவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 86 மையங்களில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.