தமிழகம்
சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்!
தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால் விநியோகத்தில் சிலமணி நேரம் தாமதம் ஏற்படலாம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை முழுவதும் பொதுமக்கள் விரும்பி பருகும் ஆவின் பால் விநியோகம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு ஆவின் நிர்வாகம் வருந்துகிறது.
மேலும் இந்த சூழ்நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.