Connect with us

ரசிகர்களை வருத்தமடைய விடக்கூடாது: விராட் கோலி!

விளையாட்டு

ரசிகர்களை வருத்தமடைய விடக்கூடாது: விராட் கோலி!

நடப்பு ஐபிஎல் தொடரில் 58-வது லீக் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் 181 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

அதிரடியாக விளையாடி 47 பந்தில் 92 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற பின் விராட் கோலி பேசியதாவது:

என்னைப்பொறுத்த வரையில் ரன்களின் எண்ணிக்கையைவிட தரமே முக்கியமானது. எனக்கு இந்த தத்துவம் நன்றாக வேலை செய்கிறது. விளையாட்டினை புரிந்துகொண்டு விளையாடும்போது பயிற்சி குறைவாக தேவைப்படுகிறது. இதற்கு முன்பு நாம் என்ன செய்தேனோ அதையே செய்தால் போதுமானதாக இருக்கிறது. இருப்பினும் போட்டியில் சிறப்பாக செயல்பட சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இது ஒரு படிப்படியான பரிணாமத்தைச் சார்ந்தது.

சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடித்தேன். அதற்காக தனியாக பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் முந்தைய காலத்தில் ஆடியிருக்கிறேன். சுழல் பந்துக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டியுள்ளது. ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியும். அதை ஒரு தீர்க்கமான முடிவுடன் எடுத்தேன்.

ஸ்டிரைக் ரேட்டினையும் சரியாக வைத்துகொள்ள முயன்றேன். அது எனக்கும் எனது அணிக்கும் உதவியது. இந்தத் தொடரில் நாங்கள் நேர்மையாக விளையாடுவது மட்டுமே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும். தொடர் தோல்வியில் இருக்கும்போது எங்களுக்குள் நேர்மறையான விவாதம் தேவைப்பட்டது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் த்ரில்லிங்காக சென்றது. நாங்கள் எங்களது சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம். கடமைக்காக சென்று விளையாடி எங்களது ரசிகர்களை வருத்தமடைய விடக்கூடாது. அணியாக நம்பிக்கை மீண்டும் வந்துள்ளது. நாங்கள் மற்ற விஷயங்களை சார்ந்திருக்காமல் தொடரின் தொடக்கத்தில் நன்றாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top