Connect with us

Raj News Tamil

மின்சாரம் தாக்கி யானை பலி!

தமிழகம்

மின்சாரம் தாக்கி யானை பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே தாழ்வாக அமைந்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் மக்னா யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கடுமையாக வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வனப்பகுதிகளிலும் கடுமையாக வறட்சி ஏற்பட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் நீரின்றி தவித்து வருகின்றன.

வனத்துறை சார்பில் ஆங்காங்கே நீர்நிலைகள் அமைத்து டேங்கர் மூலம் தண்ணீரை நிரப்பி வருகின்றனர் இதனால் வனவிலங்குகளுக்கு ஓரளவுக்கு தண்ணீர் கிடைத்தாலும் உணவிற்காக காட்டை விட்டு வெளியேறுகின்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளி ஏரி பகுதியில் உணவுக்காகவும் நீர் நிலைகளை தேடியும் 6 வயது மதிக்க தக்க மக்னா யானை வந்தபோது, ஏரி பகுதியில் வாழ்வாக அமைந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், அது சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.

கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top