Connect with us

Raj News Tamil

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

தமிழகம்

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட ப்ரணவ் ஜுவல்லரிக்கு மதுரை, நாகா்கோவில், புதுச்சேரி, சென்னை உள்பட 8 கிளைகள் உள்ளன. பல்வேறு புதிய நகை சேமிப்புத் திட்டங்களை அறிவித்து அதிக வட்டி தருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த முதலீட்டு தொகைக்கு முறையாக வட்டித்தொகை வழங்காமலும், நகை முதலீட்டு திட்டத்திலும் முறையாக நகைகளை வழங்காமலும் இருந்ததால் இந்நிறுவனத்தின் மீது பல புகார்கள் எழுந்தன. ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்நிறுவனத்தின் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து இந்த கடையின் உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகிய 2 பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக அறிவித்தனர்.

இதற்கிடையே சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் பிரணவ் ஜுவல்லரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் பேரில் கடந்த 20ம் தேதி இந்நிறுவனத்திற்கு சொந்தமான 11 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையினர் அறிவித்தனர்.

இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி, ஓரிரு நாள்களில் விசாரணைக்கு நடிகா் பிரகாஷ்ராஜ் ஆஜராவாா் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

More in தமிழகம்

To Top