தமிழகம்
அரசு மரியாதையுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் இறுதி மரியாதை.
இறுதிச்சடங்கை பொதுமக்கள் காண தேமுதிக அலுவலகத்திற்கு வெளியே எல்.இ.டி திரைகள் அமைப்பு.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என் நேரு, டி.ஆர் பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்பு.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மூத்த தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.