தமிழகம்
சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி: லாரி ஏரி உயிரிழப்பு!
சென்னை துரைப்பாக்கம் காந்தி தெருவில் உள்ள சாலையோரத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (57) இவர் கூலி வேலை செய்து கொண்டு சாலையோரத்தில் தினந்தோறும் உறங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதன்படி நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று சாலை சாலையோரம் உள்ள பிளாட்பாரத்தில் ஏறி உள்ளது. அந்த இடத்தில் சிவகுமார் உறங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் லாரி ஓட்டுனர் அவர் மீது ஏற்றி உள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்துள்ளார் இந்த விவகாரம் தொடர்பாக கிண்டி போக்குவரத்துக் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.