Connect with us

Raj News Tamil

மோடி ஒருபோதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார்: ராகுல் காந்தி!

இந்தியா

மோடி ஒருபோதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார்: ராகுல் காந்தி!

என்ன நடந்தாலும் மோடி ஒருபோதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணிக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தான் பாரத மாதா; நாட்டில் இவர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் போது பாரத மாதாவுக்கு ஜெயத்தை உண்டாகும்.

ஆனால் பிரதமர் மோடி பணக்கார்களுக்கு ஓர் இந்தியா, ஏழைக்களுக்கு ஓர் இந்தியா என இரண்டு இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். என்ன நடந்தாலும் மோடி ஒருபோதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார். ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் அதைச் செய்வார்கள்” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

More in இந்தியா

To Top