தமிழகம்
சென்னையில் பரிதாபம்..! அரசு பேருந்து மோதி இளைஞா் பலி ..!
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் வயது 19 . இவர் இன்று காலை 6:30 மணியளவில் அசோக் நகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது கண்ணதாசன் நகரில் இருந்து புறப்பட்டு ஐயப்பன்தாங்கல் செல்லவேண்டிய பேருந்தானது அசோக் நகர் வழியாக நோக்கி சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் சிவப்பிரகாசம் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனடியாக தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சரவணன் என்பவரை பிடித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..