Connect with us

Raj News Tamil

விஷ சாராயம் வழக்கு…2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

தமிழகம்

விஷ சாராயம் வழக்கு…2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், அச்சரப்பாக்கம் அருகே கடந்த மே மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் விஷ சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை (வயது 40) மற்றும் பனையூரை சேர்ந்த ராஜேஷ் (27) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. பரிந்துரை செய்தது.

இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top