Connect with us

Raj News Tamil

ஹிமாசல பிரதேசத்தில் மழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 -ஆக அதிகரிப்பு!

இந்தியா

ஹிமாசல பிரதேசத்தில் மழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 -ஆக அதிகரிப்பு!

ஹிமாசல பிரதேசத்தில் மழை-வெள்ளம் காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் மாயமாகியுள்ளனா். 860 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 667 வீடுகள் முழுமையாகவும், 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மத்திய அரசிடம் ரூ.2,000 கோடி இடைக்கால நிதி கோரப்பட்டுள்ளதாக, முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இடைக்கால நிவாரண நிதி குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் பேசினேன். மழை-வெள்ளத்தால் ரூ.4,000 கோடி அளவிலான சேதங்கள் இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளன. இப்பணிகள் நீடித்து வருவதால், சேத மதிப்பு மேலும் அதிரிக்கும்’ என்றாா்.

More in இந்தியா

To Top