Connect with us

Raj News Tamil

மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்! – சைதை துரைசாமி

இந்தியா

மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்! – சைதை துரைசாமி

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் பயணித்த போது கார் கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடா் மீட்பு படையினா் மூன்றாவது நாளாக இன்றும் தேடி வருகின்றனா். பல்வேறு இடங்களில் வானிலை மிக மோசமாக இருப்பதால் தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காரின் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காரில் பயணித்த வெற்றி துரைசாமியின் நண்பரான கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமியை மூன்றாவது நாளாகியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top