தமிழகம்
இன்று முதல் உயர்கிறது பத்திரப்பதிவு கட்டணம் – எவ்வளவு தெரியுமா??
பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
பொது அதிகார ஆவணக்கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து சொத்து மதிப்பில் 1 சதவீதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.