Connect with us

Raj News Tamil

மாநகர பேருந்தின் பின்புற கண்ணாடியை கல் வீசி உடைத்த பள்ளி மாணவர்கள்..!!

தமிழகம்

மாநகர பேருந்தின் பின்புற கண்ணாடியை கல் வீசி உடைத்த பள்ளி மாணவர்கள்..!!

கேகே நகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்புற கண்ணாடியை கற்களால் உடைத்து விட்டு தப்பித்துள்ளனர்

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து ஐயப்பன் தாங்கல் வழியாக நோக்கி சென்ற 11ஜி மாநகர பேருந்தானது கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வந்தனர்.

இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மாணவர்களை உள்ளே ஏறும்படி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு பள்ளி மாணவர்கள் கீழே இறங்கி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஓட்டுனர் ரமேஷ் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top