தமிழகம்
ஆற்றில் மூழ்கிய சிறுவன்..! அதிர்ச்சியடைந்த ஊா்மக்கள்.!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மீனாட்சிபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியம் பஞ்சவர்ணம் தம்பதியினர். இவர்களின் மகன் ரிஷிதரன் வயது (10) மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வைகை ஆற்று தடுப்பணை குளிக்க இறங்கிய போது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடிவந்த நிலையில் சிறுவன் இறந்த நிலையில் வைகை ஆற்றில் நீருக்குள் சடலமாக இருப்பதை கண்டு அந்த சிறுவனை கரை பகுதிக்கு தூக்கி வந்து உடனடியாக திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.