Connect with us

Raj News Tamil

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!

தமிழகம்

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

தேனியில் சவுக்கு சங்கரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார், அவரை கோவை அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வேறொரு வாகனத்தில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top