Connect with us

Raj News Tamil

3 நாட்களுக்கு டாஸ்மாக் தொடர் விடுமுறை!

தமிழகம்

3 நாட்களுக்கு டாஸ்மாக் தொடர் விடுமுறை!

தமிழகத்தில் டாஸ்மாக் என்ற நிறுவனம் மூலம் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு, காந்தி ஜெயந்தி போன்ற ஒரு சில நேரங்களில் மட்டும் தான் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும், 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகளும், வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி இரவு 10 மணி வரை, மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top