Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது!

தமிழகம்

கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது!

கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த இளைஞர் போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் வியாழக்கிழமை சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா பெட்டணங்கள் விற்பனை செய்வதாக காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலில் பேரில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் 25 சிறு பொட்டலங்களாக ஒரு பொட்டலம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞரை பிடித்தனர்.

விசாரணையில் அந்த இளைஞர் காரைக்குடி அண்ணாநகர் வள்ளுவர் தெருவை சேர்ந்த மணிமுத்து என தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top