Connect with us

Raj News Tamil

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ராமதாஸ்!

தேர்தல் 2024

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ராமதாஸ்!

திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவிபெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” “மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.

அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும்” என்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top