தமிழகம்
கையில் கட்டு போட்டபடி நீதிமன்றம் வந்த சவுக்கு சங்கர்
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரைப் பிடித்த போது கஞ்சா வைத்து இருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கையில் கட்டுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என சமீபத்தில் சிறைத்துறை ஏடிஜிபி விளக்கம் அளித்திருந்தது.