இந்தியா
முக்கோண காதல்.. கொடூரமாக கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்.. உடல் முழுவதும் கத்திக்குத்து..
டெல்லியில் உள்ள காயாலா என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாஹித். 15 வயதான இவர், நேற்று இரவு பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி ஷாஹித்தை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், ஷாஹித் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை இன்னொரு நபர் காதலித்து வந்ததால் இருவருக்கும் இடையே, விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் காவல்துறையினர், விரைவில் கொலையாளியை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login