Connect with us

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

தமிழகம்

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறியது தெரியவந்ததையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று சுற்றிவளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் 5 பேரையும் இந்திய எல்லைக்குள் அத்துமீறியதற்கு கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா? அல்லது கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top