Connect with us

ஒரே கோவிலில் இரண்டு முறையா ? உண்டியலை உடைத்து 20 ஆயிரம் கொள்ளை !

தமிழகம்

ஒரே கோவிலில் இரண்டு முறையா ? உண்டியலை உடைத்து 20 ஆயிரம் கொள்ளை !

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ வல்லடியான் ,அய்யனார் கோவிலின் முகப்பு வாயிலில் உள்ள இரும்பு கேட்டை மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை கோவிலின் பூசாரி சதீஷ் – 35 கோவிலில் பூஜைகளை முடித்து கோவிலின் கதவுகளை சாத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய வரும் போது இரும்பு கேட்டின் பூட்டு மாட்டும் கொண்டிகளை அறுத்து உள்ளே இருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பெயரில் துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள தச்சமலை வனப்பகுதியில் சில்லறை காசுகள் கிடப்பதாக வனத்துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இக்கோவிலில் இதே போன்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top