Connect with us

போர் தொடங்கிற்று கொட்டடா முரசு; 40 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி!

தமிழகம்

போர் தொடங்கிற்று கொட்டடா முரசு; 40 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி!

நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து ஆவடி தொகுதி எங்கும் நாம் தமிழர் கட்சியின் கொடி பொறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சி கொடி பொறித்த சுவரொட்டிகள் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டி வருகின்றனர்.

போர் தொடங்கிற்று கொட்டடா முரசு, 40 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஆவடி தொகுதி எங்கும் ஒட்டப்பட்டு வருகிறது.

முன்னதாக கரும்பு விவசாயி சின்னம் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் சின்னம் முடக்கியதை அடுத்து தற்போது புதிய போஸ்டர் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி வாரியாக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளருடன் விவசாய சின்னம் பொரித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் மீண்டும் புதிய போஸ்டருடன் தேர்தல் பணிகளை நாம் தமிழர் கட்சியினர் துவக்கி உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top