Connect with us

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

தமிழகம்

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

தமிழக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேர் 5 படகுடன் சிறைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மன்னார் மற்றும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top