Connect with us

Raj News Tamil

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

வானிலை

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top