Connect with us

மனைவியை தாக்குவதற்காக நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது..!

தமிழகம்

மனைவியை தாக்குவதற்காக நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது..!

வேலூர் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சேர்ந்த கார்த்திக் (27) சென்னை வில்லிவாக்கத்தில் வசித்துவருகிறார். மதுவிற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் மனைவி மீது வீசுவதற்காக இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்துவைத்துள்ளார்.

இந்த நிலையில், மது போதையில் கடைக்கு சென்ற கார்த்திக், சிகரெட் வாங்கி விட்டு அதற்கு பணம் தர மறுத்ததோடு அந்த கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்டுள்ளார். இது குறித்து அந்த கடைக்காரர் சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது போதையில் இருந்த கார்த்திகை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது மனைவியை தாக்குவதற்காக தனது வீட்டில் மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டை காவல் நிலையம் மீது வீசி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கார்த்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சமையலறையில் டிபன் பாக்ஸில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டுகளைய பறிமுதல் செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top