தமிழகம்
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. அதிமுக மகளிரணி துணை தலைவி கைது..!
விருதுநகர் மாவட்டம் கொல்லர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். 42 வயதான இவருக்கு, அமல்ராணி என்ற மனைவி உள்ளார். மேற்கு மாவட்ட அதிமுகவின் மகளிரணி துணை தலைவியாக அமல்ராணி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரசேகரனும், அமல்ராணியும், ஐடிபிடி காலணி பகுதியில், தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில், பாலியல் தொழில் நடந்து வருவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அங்கு வந்த காவல்துறையினர், வீட்டில் இருந்த ஹரிபாலகுமார், கற்பகவள்ளி ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்திரசேகரனும், அமல்ராணியும் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. தற்போது, அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினா, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login