Connect with us

Raj News Tamil

பிச்சை எடுத்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த நபர்…யார் சாமி நீ??

இந்தியா

பிச்சை எடுத்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த நபர்…யார் சாமி நீ??

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் பிச்சை எடுத்து சொந்த வீடு மற்றும் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் வீதி வீதியாக சென்று பிச்சை எடுத்து வருகிறார். தற்போது இவருடைய சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் ஆகும். ஒவ்வொரு மாதமும் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை இவருக்கு வருமானம் வருகிறது.

மும்பையில் சொந்தமாக இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வைத்திருப்பதாகவும் அதன் மதிப்பு மட்டுமே ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சொந்தமாக இரண்டு கடைகள் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது.

என்னதான் 7.5 கோடி ரூபாய் சொத்து இருந்தாலும் அந்த நபர் இன்னமும் பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

More in இந்தியா

To Top