Connect with us

Raj News Tamil

எங்கு பார்த்தாலும் அராஜகம்..திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம்

தமிழகம்

எங்கு பார்த்தாலும் அராஜகம்..திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் கவுதம் சிகாமணி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக செயல் பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எங்கு பார்த்தாலும் அராஜகம், மயிலாப்பூரில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்தி, டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட துறைகளில் எங்கும் ஊழல் எதிலும் ஊழலாக திமுக செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாகவும், சென்னையில் சாலை வசதி மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

More in தமிழகம்

To Top