Connect with us

Raj News Tamil

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சி..!! – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழகம்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சி..!! – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

47-வது சென்னை புத்தகக் காட்சி 2024, சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 4ம் தேதியன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர்‌ மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளார்.

ஜனவரி 4ம் தேதி தொடங்கி 21 ம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் புத்தகக் கண்காட்சி 11 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்‌ மற்றும் வேலை நாட்களில் 2 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள். எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. சர்வதேச புத்தக திருவிழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 16,17,18 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 800க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது..

சிறை கைதிகளுக்கான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறப்பு பிரிவினர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட சிறப்பு அரங்குகள் கடந்த ஆண்டு போலவே அத்தனை அரங்குகளும் இந்த ஆண்டும் அமைக்கப்பட உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top