இந்தியா
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல் – மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டள்ளது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காகனது அல்ல என்றும் உள்துறை அமைச்சர் விளக்கியிருந்தார்.
அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய 6 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேற குடியுரிமை பெற முடியும்.