Connect with us

RajNewsTamil

ஜில் பைடனுக்கு உறுதியான கொரோனா தொற்று-ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டாரா?

உலகம்

ஜில் பைடனுக்கு உறுதியான கொரோனா தொற்று-ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டாரா?

ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைமையாக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட நாட்டுதலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் , 7-ஆம் தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும்,ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top