தமிழகம்
குழந்தையின் கால்களை வெட்டி எடுத்து; தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர்!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செவிலியர் வினிஷா(24), இவர் தி. நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி கடந்த ஒரு வருடங்களாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வினிஷாவிற்கு சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதனால் கருத்தரித்த வினிஷா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். திடீரென வினிஷாவிற்கு அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனே வினிஷா பாத்ரூம் சென்று குழந்தையின் இரு கால்களையும் வெட்டி எடுத்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
பின்னர் வினிஷா இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இறந்த குழந்தையை பத்திரப்படுத்தியதுடன் வினிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாம்பலம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.