இந்தியா
தாவூத் இப்ராஹிம்-க்கு வைக்கப்பட்ட விஷம்?
நிழல் உலக தாதாவாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தாவூத் இப்ராஹிம். இந்திய அரசின் தேடப்படும் குற்றவாளியாக உள்ள இவர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மேலும், தாவூத் இப்ராஹிம், துபாய் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், வசித்து வருவதாகவும், அவ்வப்போது தகவல் வெளிவந்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், இவர் சாப்பிடும் உணவில், விஷம் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை சாப்பிட்ட அவர், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல் கசிந்துள்ளது.
இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து, இதுவரை எந்தவொரு ஆதாரங்களும் வெளியாகவில்லை. ஆனால், இந்த தகவல், ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.