Connect with us

Raj News Tamil

சமூகத்தின் வளர்ச்சி; பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது: திரவுபதி முர்மு!

இந்தியா

சமூகத்தின் வளர்ச்சி; பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது: திரவுபதி முர்மு!

ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளப் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள். நாரி சக்தியைக் கொண்டாடும் தருணம் இது. ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் மகள்கள் விளையாட்டு தொடங்கி அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியும் தேசத்துக்கு பெருமையும் சேர்த்துள்ளனர். நாளைய இந்தியாவை அவர்கள் உருவாக்குவதற்காக, இளம்பெண்களின் பாதைகளில் எஞ்சியிருக்கும் தடைகளை தகர்த்து அவர்களுக்கு சிறகுகளை வழங்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top